Showing posts with label சாம்பார். Show all posts
Showing posts with label சாம்பார். Show all posts

Tuesday, November 8, 2011

வத்தக்குழம்பு, சாம்பார், ரசம் செய்ய

பருப்பு சாம்பார் செய்ய, வெந்த பருப்புடன் புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும் . காய்கள் தாளித்ததும், இதை கொட்டி, சாம்பார் பொடி ,வெந்தயபொடி, பெருங்காயப்பொடி  என எல்லாம் போட்டு கொதித்ததும்  இறக்கவும்.
பருப்புசாம்பார் போலவே, ரசம்  இரண்டு முதல் முன்று ஸ்பூன் புளி பேஸ்ட் ஐ உபயோகிக்கலாம்.
ரசத்துக்கு தாளித்ததும் , இரண்டு தம்ப்ளர் தண்ணி விட்டு டனும்.
பிறகு புளி பேஸ்ட் ஐ போட்டு கலக்கணும்.
உடனேயே ரசப்பொடி , தக்காளி பருப்பு ஜலம், மஞ்சள் பொடி, பெருங்காய பொடி உப்பு எல்லாம் போட்டுடலாம்.
நன்கு கொதித்து விளாவினதும் இறக்கிடலாம்.
இங்கு நாம் புளி பேஸ்ட் ஐ உபயோகிப்பதால் சமயல் நேரம் குறையும். புளி யும் ‘திட்டமாக ‘ உபயோகிக்கலாம்.
வத்தல் குழம்புக்கும் இதே போல் தான்
புளிப்பு வேண்டுமானால் கடைசியில் கூட இன்னும் சேர்க்கலாம்.
No problem ஏன்னா புளி முன்பே நல்லா கொதித்துவிட்டது.
புளி பேஸ்ட் ஐ உபயோகிப்பதால் உங்கள் புளி செலவு பாதியாகிவிடும் பாருங்களேன்.