tag:blogger.com,1999:blog-47666590964063037722024-03-13T07:36:59.634-07:00சமையலsenthilkumarhttp://www.blogger.com/profile/12655112694478816633noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-4766659096406303772.post-92131341855801666902011-11-09T20:59:00.001-08:002011-12-14T03:58:52.245-08:00சமையல் செய்முறை:மார்கழி பலகாரங்கள்....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கைப்பிடி, பால் - இரண்டு லிட்டர், சர்க்கரை - 200 கிராம், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.<br />
செய்முறை: பாசுமதி அரிசியை ரவை போல உடைத்து, பால் சேர்த்துக் குழைவாக வேகவிடவும். அரிசி நன்றாக வெந்ததும், சர்க்கரை சேர்த்து... வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் போட்டு இறக்கவும்.<br />
குறிப்பு: சாதாரண அரிசியைவிட, பாசுமதி அரிசியில் செய்தால் டேஸ்ட் அருமையாக இருக்கும்.<br />
<div style="text-align: center;">
<span style="color: #ff9900;">அவல் பாயசம் </span> </div>
<div style="text-align: center;">
<img alt="" height="187" src="http://new.vikatan.com/aval/2010/12/17/images/avl04%282%29.jpg" width="250" /></div>
தேவையானவை: அவல் - ஒரு கப், பால் - அரை லிட்டர் (காய்ச்சி, ஆற வைக்கவும்), சர்க்கரை - 2 கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரி - 10, நெய் - 2 டீஸ்பூன்.<br />
செய்முறை: நெய் விட்டு அவலை லேசாக சிவக்க வறுத்து, ரவை போல பொடித்துக் கொள்ளவும். ஒரு கப் தண்ணீரை கொதிக்கவிடவும். கொதிக்கும் நீரில் அவலைத் தூவி, கிளறி வேகவிடவும். வெந்ததும் பாலை சேர்த்துக் கிளறி, சர்க்கரை சேர்த்து ஐந்து நிமிடம் கலக்கி... வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்<br />
<div style="text-align: center;">
<span style="color: #ff6600;">ஜவ்வரிசி பாயசம் </span></div>
<div style="text-align: center;">
<span style="color: #ff6600;"><img alt="" height="151" src="http://new.vikatan.com/aval/2010/12/17/images/avl106%282%29.jpg" width="200" /></span></div>
<div style="text-align: center;">
<br /></div>
தேவையானவை: ஜவ்வரிசி - 100 கிராம், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு - 10, கேசரி பவுடர் - சிறிதளவு.<br />
செய்முறை: ஜவ்வரிசியை லேசாக வறுக்கவும். இதில் பாலை ஊற்றி வேகவிடவும். நன்றாக வெந்ததும் இறக்கி, சர்க்கரை சேர்க்கவும். வறுத்த முந்திரிப்பருப்பு, கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் போட்டு நன்றாகக் கலக்கவும்.<br />
<div style="text-align: center;">
<span style="color: #ff9900;">தேங்காய்அரிசி பாயசம் </span></div>
<div style="text-align: center;">
<span style="color: #ff9900;"><img alt="" height="166" src="http://new.vikatan.com/aval/2010/12/17/images/avl07%281%29.jpg" width="228" /></span></div>
<div style="text-align: center;">
<br /></div>
தேவையானவை: அரிசி - அரை கப், தேங்காய் துருவல் - ஒன்றரை கப், பொடித்த வெல்லம் - 2 கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு - சிறிதளவு, பால் - அரை லிட்டர்.<br />
செய்முறை: அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். பாலைக் காய்ச்சி, ஆற வைக்கவும். அரைத்ததை சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து அடுப்பில் வைத்து பத்து நிமிடம் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். நன்றாக வெந்ததும், வெல்லம் சேர்த்துக் கொதிக்க வைத்து... வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், காய்ச்சிய பால் சேர்த்துக் கலந்து இறக்கவும்.<br />
குறிப்பு: தேங்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்துப் போடலாம். வாழைப்பழம், பலாச்சுளையை பொடியாக நறுக்கிப் போடலாம். பாலுக்குப் பதிலாக தேங்காய்ப்பால் சேர்த்தால் சுவை கூடும்.<br />
<div style="text-align: center;">
<span style="color: #ff9900;">பைனாப்பிள்|பருப்பு பாயசம் </span></div>
<div style="text-align: center;">
<span style="color: #ff9900;"><img alt="" height="135" src="http://new.vikatan.com/aval/2010/12/17/images/avl108%281%29.jpg" width="200" /></span></div>
<div style="text-align: center;">
<br /></div>
தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், கடலைப்பருப்பு - அரை கப், பைனாப்பிள் - 2, வெல்லம் - கால் கிலோ, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு - 10, பால் - 1 லிட்டர் (காய்ச்சி ஆற வைக்கவும்).<br />
செய்முறை: பாசிப்பருப்பையும், கடலைப்பருப்பையும் வெறும் கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து, குழைவாக வேகவிடவும். வெந்த பருப்புகளுடன் வெல்லம் சேர்த்துக் கலந்து, கொதிக்க வைத்து இறக்கி... ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பு சேர்க்கவும். காய்ச்சிய பாலை இதில் விட்டுக் கலந்து, சாப்பிடுவதற்கு முன்பு பைனாப்பிளை சிறு துண்டுகளாக நறுக்கி மேலே போடவும்.<br />
குறிப்பு: பருப்பு, பால், பைனாப்பிள் என மணமும், ருசியும் வித்தியாசமாக இருக்கும் இந்தப் பாயசம். விருப்பப்பட்டால், சிறிது பாதாம், முந்திரியை அரைத்துச் சேர்க்கலாம்.<br />
<div style="text-align: center;">
<span style="color: #ff9900;">மசால் வடை </span></div>
<div style="text-align: center;">
<span style="color: #ff9900;"><img alt="" height="151" src="http://new.vikatan.com/aval/2010/12/17/images/avl112%281%29.jpg" width="250" /></span></div>
<div style="text-align: center;">
<br /></div>
தேவையானவை: பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், உளுத்தம்பருப்பு - 200 கிராம், இஞ்சி - ஒரு சிறு துண்டு (தோல் சீவி நறுக்கவும்), பச்சை மிளகாய் - 4, மிளகு - 10, பூண்டு - 4 பல், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.<br />
செய்முறை: உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீரை வடிகட்டவும். இதில் உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, மிளகு சேர்த்து கெட்டியாக அரைத்து, வெங்காயம் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்த மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.<br />
குறிப்பு: இதற்கு சட்னி (அ) சாம்பார் பிரமாதமாக இருக்கும். மணக்கும் இந்த வடை, மழைக்காலத்துக்கு ஏற்ப மொறுமொறுவென்று இருக்கும்.<br />
<div style="text-align: center;">
<span style="color: #ff9900;">வெஜிடபிள் வடை </span></div>
<div style="text-align: center;">
<span style="color: #ff9900;"><img alt="" height="255" src="http://new.vikatan.com/aval/2010/12/17/images/avl110%281%29.jpg" width="381" /></span></div>
தேவையானவை: வெள்ளை உளுத்தம்பருப்பு - கால் கிலோ, பொடியாக நறுக்கிய கோஸ், வெங்காயம், துருவிய கேரட் - தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.<br />
செய்முறை: உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, களைந்து. தண்ணீரை வடிகட்டி... இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். இதில் உப்பு, நறுக்கிய வெங்காயம், கோஸ், கேரட் துருவல், கறிவேப்பிலை சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்த மாவை வடைககளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.<br />
குறிப்பு: சட்னி, சாஸ் இதற்கு சிறந்த காம்பினேஷன். கீரையைப் பொடியாக நறுக்கி மாவில் போட்டும் செய்யலாம்.<br />
<div style="text-align: center;">
<span style="color: #ff9900;">மிளகு வடை </span></div>
<div style="text-align: center;">
<span style="color: #ff9900;"><img alt="" height="285" src="http://new.vikatan.com/aval/2010/12/17/images/avl111%281%29.jpg" width="381" /></span></div>
<div style="text-align: center;">
<br /></div>
தேவையானவை: உளுத்தம்பருப்பு - கால் கிலோ, மிளகு - 15, காய்ந்த மிளகாய் - இரண்டு, இஞ்சி - சிறிய துண்டு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.<br />
செய்முறை: அரை மணி நேரம் உளுத்தம்பருப்பை ஊற வைக்கவும். பிறகு களைந்து, தண்ணீரை வடிகட்டி... மிளகு, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். இதில் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்த மாவை வடைகளாக தட்டிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும்.<br />
குறிப்பு: மிளகு, இஞ்சி வாசனையுடன் மிகவும் ருசியாக இருக்கும். எளிதில் ஜீரணமும் ஆகும்.<br />
<div style="text-align: center;">
<span style="color: #ff9900;">தானியம்-பருப்பு வடை </span></div>
<div style="text-align: center;">
<span style="color: #ff9900;"><img alt="" height="151" src="http://new.vikatan.com/aval/2010/12/17/images/avl112%282%29.jpg" width="250" /></span></div>
<div style="text-align: center;">
<br /></div>
தேவையானவை: முளைகட்டிய கொள்ளு, முளைகட்டிய பாசிப்பயறு, முளைகட்டிய சோளம், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கப், பூண்டுப்பல் - 4, இஞ்சி - சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - 2, மிளகு - 10, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.<br />
செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீரை வடிகட்டவும். இதனுடன் சோளம், கொள்ளு, பாசிப்பயறு சேர்த்து... பூண்டு, காய்ந்த மிளகாய், இஞ்சி, மிளகு போட்டு கெட்டியாக அரைக்கவும். உப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.<br />
குறிப்பு: புரதச்சத்து நிறைந்த வடை இது. இந்த மாவை சிறு உருண்டையாக உருட்டி, வேக வைத்து குழம்பும் தயாரிக்கலாம். சிறிய குணுக்குகளாகவும் உருட்டிப் போட்டு பொரித்து சாப்பிடலாம்.<br />
<div style="text-align: center;">
<span style="color: #ff9900;">வாழைப்பூ வடை </span></div>
<div style="text-align: center;">
<span style="color: #ff9900;"><img alt="" height="131" src="http://new.vikatan.com/aval/2010/12/17/images/avl113%282%29.jpg" width="200" /></span></div>
<div style="text-align: center;">
<br /></div>
தேவையானவை: ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ - இரண்டு கைப்பிடி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - ஒரு கப், உளுத்தம்பருப்பு - கால் கப், காய்ந்த மிளகாய் - 4, இஞ்சி - ஒரு துண்டு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.<br />
செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மூன்றையும் சேர்த்து ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டி, காய்ந்த மிளகாய், இஞ்சி போட்டு கெட்டியாக அரைக்கவும். சிறிது எண்ணெயில் வாழைப்பூவை வதக்கி, அரைத்த மாவில் போட்டு... உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை வடைகளாக தட்டிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும்.<br />
குறிப்பு: இது லேசான துவர்ப்புச் சுவையில் இருப்பதால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லது. இதே முறையில் வாழைத்தண்டை சேர்த்தும் செய்யலாம்.<br />
<div style="text-align: center;">
<span style="color: #ff9900;">கல்கண்டு பொங்கல் </span></div>
<div style="text-align: center;">
<span style="color: #ff9900;"><img alt="" height="187" src="http://new.vikatan.com/aval/2010/12/17/images/avl114.jpg" width="250" /></span></div>
தேவையானவை: அரிசி - கால் கிலோ, கல்கண்டு - அரை கிலோ, பால் - ஒரு லிட்டர், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ - சிறிதளவு, முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சை - தலா 10, நெய் - 4 டீஸ்பூன்.<br />
செய்முறை: அரிசியுடன் பால் சேர்த்து குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். நன்றாகக் குழைந்து இருக்க வேண்டும். இதனுடன் கல்கண்டு சேர்த்து மசிக்கவும். சூட்டில் கல்கண்டு கரைந்து விடும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்க்கவும். ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ போட்டுக் கலக்கவும்.<br />
குறிப்பு: பாலும் கல்கண்டும் சேர்ந்த இந்தப் பொங்கலுக்கு உளுந்து வடை வித்தியாசமான காம்பினேஷன்.<br />
<div style="text-align: center;">
<span style="color: #ff9900;">ரவா பொங்கல் </span></div>
<div style="text-align: center;">
<span style="color: #ff9900;"><img alt="" height="179" src="http://new.vikatan.com/aval/2010/12/17/images/avl115.jpg" width="239" /></span></div>
தேவையானவை: ரவை - கால் கிலோ, முந்திரிப்பருப்பு, மிளகு - தலா 10, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.<br />
செய்முறை: ரவையை நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும். மிளகு, சீரகத்தைப் பொடிக்கவும். ரவையின் அளவில் நான்கு மடங்கு தண்ணீர் எடுத்து, நன்றாகக் காய்ச்சி, கொதிக்க விட்டு... அதில் ரவையைப் போட்டுக் கிளறி, உப்பு போட்டு வேகவிடவும். நெய்யில் முந்திரிப்பருப்பு, பொடித்த மிளகு-சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை தனித்தனியே வறுத்து, எல்லாவற்றையும் வெந்த பொங்கலில் சேர்த்துக் கிளறி இறக்கவும்.<br />
குறிப்பு: இதற்கு வெங்காய சட்னி சூப்பர் சைட் டிஷ்! கோதுமை ரவையிலும் இதேபோல் பொங்கல் செய்யலாம்.<br />
<div style="text-align: center;">
<span style="color: #ff9900;">வெண் பொங்கல் </span></div>
<div style="text-align: center;">
<span style="color: #ff9900;"><img alt="" height="139" src="http://new.vikatan.com/aval/2010/12/17/images/avl116.jpg" width="200" /></span></div>
தேவையானவை: பச்சரிசி - கால் கிலோ, பாசிப்பருப்பு - ஒரு கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பொடித்த மிளகு - சீரகம் - 4 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, முந்திரிப்பருப்பு - 10, உப்பு - தேவையான அளவு.<br />
செய்முறை: வெறும் கடாயில் அரிசியைப் போட்டு லேசாக சூடு வரும் வரை வறுக்கவும். பாசிப்பருப்பையும் சிவக்க வறுக்கவும். அரிசியும் பருப்பும் கலந்து, மஞ்சள்தூள் சேர்த்து, ஒரு மடங்குக்கு 4 மடங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். பொடித்த மிளகு, சீரகத்தை நெய்யில் வறுத்து, வெந்த பொங்கலில் சேர்க்கவும். கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பையும் நெய்யில் வறுத்துப் போடவும். உப்பு சேர்த்து, நன்றாக மசித்து, மேலாக நெய் விட்டுக் கலக்கவும்.<br />
குறிப்பு: இதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.<br />
<div style="text-align: center;">
<span style="color: #ff9900;">பால் பொங்கல் </span></div>
<div style="text-align: center;">
<span style="color: #ff9900;"><img alt="" height="150" src="http://new.vikatan.com/aval/2010/12/17/images/avl117.jpg" width="200" /></span></div>
தேவையானவை: அரிசி - கால் கிலோ, பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - அரை கிலோ, குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு - 10, நெய் - 4 டீஸ்பூன்.<br />
செய்முறை: அரிசியை அரை லிட்டர் பால் சேர்த்து குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். மீதமுள்ள பாலை நன்றாகக் காய்ச்சி வேக வைத்த சாதத்தில் விட்டு மசித்து, சர்க்கரை சேர்த்து நன்றாக மசித்து, அடுப்பில் வைத்துக் கிளறவும். இதில் வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் போட்டு, நெய் விட்டுக் கலக்கி, குங்குமப்பூ சேர்த்துக் கிளறி இறக்கவும்.<br />
குறிப்பு: அரிசியை ரவை போல உடைத்து வேக வைத்தால் சீக்கிரம் குழையும். குழந்தைகளுக்குப் பிடித்த பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு கொடுக்கலாம். பாலுடன் பழங்களும் சேரும்போது, ருசி அபாரமாக இருக்கும்.<br />
<div style="text-align: center;">
<span style="color: #ff9900;">சர்க்கரைப் பொங்கல் </span></div>
<div style="text-align: center;">
<span style="color: #ff9900;"><img alt="" height="139" src="http://new.vikatan.com/aval/2010/12/17/images/avl118.jpg" width="200" /></span></div>
தேவையானவை: அரிசி, பாகு வெல்லம் - தலா கால் கிலோ, பால் - 2 கப், நெய் - 100 கிராம், முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சை - தலா 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.<br />
செய்முறை: அரிசியுடன் பாலும், தண்ணீரும் கலந்து சேர்த்து (அரிசி அளவில் நான்கு மடங்கு இருக்க வேண்டும்), குக்கரில் வைத்து, ஆறு விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்தை நன்றாகப் பொடித்து தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும். பாகு கெட்டியானதும் வேக வைத்த சாதத்தை நன்றாக மசித்துக் கலக்கவும். முந்திரிப்பருப்பு, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்க்கவும். ஏலக்காய்த்தூள் போட்டு, நெய் விட்டு நன்றாகக் கலக்கவும்.<br />
குறிப்பு: சர்க்கரைப் பொங்கலுடன் சிறு வாழைப் பழத்துண்டுகள், பொடியாக நறுக்கிய பலாச்சுளை ஆகியவற்றை சேர்த்தும் சாப்பிடலாம்.<br />
<br /></div>senthilkumarhttp://www.blogger.com/profile/12655112694478816633noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4766659096406303772.post-48053524839944039682011-11-08T18:39:00.001-08:002011-12-14T03:59:06.702-08:00அரிசி வடை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தேவையானவை:<br />
புழுங்கல் அரிசி 2 கப்<br />
தேங்காய் 1 பெரிய மூடி<br />
மிளகாய் வற்றல் 5 -6<br />
பெருங்காயப்பொடி 1/2 ஸ்பூன்<br />
உப்பு<br />
பொறிக்க எண்ணை<br />
செய்முறை:<br />
அரிசியை 1/2 மணி முதல் 1 மணி நேரம் வரை ஊறவைத்த் மட்டாய் தண்ணீர்விட்டு அரைக்கவும் .<br />
மிளகாய் வற்றல் , பெருங்காயபொடி,தேங்காய் துருவல் மற்றும் உப்பு போட்டு அரைக்கவும் .<br />
வாணலி இல் எண்ணை வைத்து வடை தட்டவும் .<br />
நல்ல ‘கரகரப்பாக ‘வரும்.<br />
ஆனால் கொஞ்சம் எண்ணை குடிக்கும் </div>senthilkumarhttp://www.blogger.com/profile/12655112694478816633noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4766659096406303772.post-65310764906734098842011-11-08T18:38:00.003-08:002011-12-14T03:59:16.109-08:00முழு உளுந்து பொங்கல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தேவையானவை:<br />
முழு உளுந்து – 1/2 கப்<br />
பச்சரிசி -1 கப்<br />
இஞ்சி (நறுக்கியது) – 1/2 ஸ்பூன்<br />
மிளகு – 1 டீஸ்பூன்<br />
சீரகம் – 1 ஸ்பூன்<br />
பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன்<br />
கறிவேப்பிலை – சிறிதளவு<br />
நெய் – 1/4 கப்<br />
உப்பு – தேவையான அளவு<br />
செய்முறை:<br />
முழு உளுந்தை அரை மணி நேரம் ஊற வைத்து நன்றாகக் களைந்து எடுக்கவும். அரிசியுடன் சேர்த்து ஒன்றுக்கு 3 பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். ஆறியதும், உப்பு போட்டு நன்றாகக் கலக்கவும்.<br />
கடாயில் நெய் விட்டு பொடித்த மிளகு, சீரகம் தாளித்து அதில் நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து பொங்கலில் விட்டு நன்றாகக் கலக்கி பரிமாறவும்.<br />
இதுவும் பெண் குழந்தைகளுக்கு ஏற்றது</div>senthilkumarhttp://www.blogger.com/profile/12655112694478816633noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4766659096406303772.post-71753184768929111322011-11-08T18:38:00.001-08:002011-12-14T03:59:26.691-08:00குழம்பு வடாம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தேவையானவை:<br />
பூசணி துருவல் – ஒரு கப்,<br />
உளுத்தம்பருப்பு – ஒரு கப்,<br />
மிளகாய் வற்றல் – 5 முதல் 8,<br />
உப்பு – தேவையான அளவு,<br />
பெருங்காயம – கால் டீஸ்பூன்<br />
செய்முறை:<br />
உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.<br />
அதனுடன் பூசணிக்காய் துருவல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசையவும்.<br />
பிசைந்த மாவை பிளாஸ்டிக் பேப்பரில் சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு, நன்றாக காய்ந்ததும் எடுக்கவும்.<br />
வத்தகுழம்பு , பருப்புசாம்பார், பொரிச்ச கூ ட்டு செய்யும்போது இதைப் பொரித்துப் போட்டால், சுவையும் மணமும் கூடும்.<br />
<strong>குறிப்பு: பூசணிக்காய் துருவல் போடாமலும் இதை செய்யலாம்</strong></div>senthilkumarhttp://www.blogger.com/profile/12655112694478816633noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4766659096406303772.post-80323893466423132192011-11-08T18:37:00.003-08:002011-12-14T03:59:36.773-08:00சாம்பாரில் போடும் வெங்காய வடாம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
செட்டி நாட்டு வெங்காய வடகம்<br />
தேவையான வை :<br />
சின்ன வெஙகாயம் – 1/2 கிலோ,<br />
பூண்டு – 50 கிராம்<br />
உளுத்தம் பருப்பு – 100 கிராம்<br />
சிகப்பு மிளகாய் – 15 -20<br />
சீரகம் – 1 டீ ஸ்பூன்<br />
பெருங்காயத் தூள் – 1/2 ஸ்பூன்<br />
கடுகு – 2 டீ ஸ்பூன்<br />
உப்பு – தேவையான அளவு,<br />
கறிவேப்பிலை – கொஞ்சம்<br />
மஞ்சள் தூள் – கொஞ்சம்<br />
செய்முறை :<br />
வெங்காயத்தையும், பூண்டையும் உரித்து மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெள்ளை உளுத்தம் பருப்பை ஊறவைத்து களைந்து கல் நீக்கி மிளகாயுடன் உப்பும் சேர்த்து கெட்டியாக நைஸாக அரைத்துக் கொள்ளவும்.<br />
மாவுடன் சீரகம், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், கடுகு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.<br />
வெயிலில் பிளாஸ்டிக் ஷீட்டைப் போட்டு மாவைச் சிறிது சிறிதாகக் கிள்ளி காயவைக்கவும்.<br />
மறுநாள், வத்தலை திருப்பி போட்டு காய வைக்கவும்.<br />
2 நாள் காயவேண்டும்.<br />
காய்ந்ததும் ‘சல சல வென சத்தம் வரணும்.<br />
பிறகு டப்பாவில் போட்டு வைக்கலாம்.<br />
தேவையான போது வறுத்து குழம்பில் போடலாம்.</div>senthilkumarhttp://www.blogger.com/profile/12655112694478816633noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4766659096406303772.post-71233985424329379112011-11-08T18:37:00.001-08:002011-12-14T03:59:46.057-08:00கத்தரிக்காய் வற்றல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கத்தரிக்காய் வற்றல் – இது போடுவதும் சுலபம். குழம்பில் போடுவதும் சுலபம்.<br />
கத்தரிக்காய்யை நீள நீள மாக வெட்டி வெயிலில் நன்றாக காயவைக்கணும். (வைத்தலை உடைக்கவரனும் )<br />
குழம்பு செய்யும் முன் ஒரு 10 – 15 நிமிஷம் தண்ணிரில் ஊரவைக்கணும்.<br />
குழம்பு கொதிக்கும் போதே, ஊறவைத்த தண்ணியுடன் வத்தலையும் போட்டுடனும். புளி தண்ணியுடன் வத்தலும் கொதிக்கணும் அப்பதான் taste வரும்.<br />
இந்த வத்தலை பருப்பு சாம்பாரிலும் போடலாம், வத்த குழம்பிலும் போடலாம்.<br />
சாயந்தரம் ஆக ஆக கத்தரிக்காய் ஊறி ண்டு ரொம்ப நல்ல இருக்கும். அரிசி உப்புமா விற்கு நல்ல துணை</div>senthilkumarhttp://www.blogger.com/profile/12655112694478816633noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4766659096406303772.post-58753121163695572062011-11-08T18:36:00.001-08:002011-12-14T03:59:56.179-08:00கறிவேப்பிலை குழம்பு 3<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தேவையானவை :<br />
கறிவேப்பிலை உருவியது 2 கப்<br />
மிளகாய் வற்றல் 12 – 14<br />
மிளகு 2 ஸ்பூன்<br />
தனியா 2 ஸ்பூன்<br />
புளி பேஸ்ட் 2 ஸ்பூன்<br />
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்<br />
பெருங்காயப் பொடி 1/2 ஸ்பூன்<br />
கடுகு 1 ஸ்பூன்<br />
உப்பு<br />
எண்ணை<br />
செய்முறை :<br />
ஒரு வாணலி இல் 1 ஸ்பூன் எண்ணை விட்டு , தனியா , மிளகாய் வற்றல் மற்றும் மிளகை வறுக்கவும்.<br />
தனியே வைக்கவும்.<br />
வறுத்ததுடன் கறிவேப்பிலையை போட்டு நன்கு, துளி தண்ணீர் விட்டு அரைக்கவும் .<br />
வாணலி இல் எண்ணை வைத்து கடுகு, மஞ்சள் பொடி தாளித்து, அரைத்தத்தை கொட்டி கிளறவும்<br />
புளி பேஸ்ட் , பெருங்காய பொடி போடவும்.<br />
வேண்டுமானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.<br />
நன்கு கொதித்தது, கெட்டியானதும் இறக்கவும்.<br />
சுவையான ‘கறிவேப்பிலை குழம்பு ‘ ரெடி.<br />
சூடு சாதத்தில் நிறைய நெய் விட்டு , ‘கறிவேப்பிலை குழம்பு விட்டு பிசைந்து சாப்பிடவும்.<br />
<strong>குறிப்பு: இதுவும் 1 வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம் .</strong></div>senthilkumarhttp://www.blogger.com/profile/12655112694478816633noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4766659096406303772.post-76957039467071684042011-11-08T18:35:00.005-08:002011-12-14T04:00:17.691-08:00கறிவேப்பிலை குழம்பு 2<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தேவையானவை :<br />
கறிவேப்பிலை உருவியது 1 கப்<br />
துவரம் பருப்பு 2 ஸ்பூன்<br />
கடலை பருப்பு 1 ஸ்பூன்<br />
மிளகாய் வற்றல் 4 -6<br />
மிளகு 2 டீ ஸ்பூன்<br />
தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்<br />
புளி பேஸ்ட் 2 ஸ்பூன்<br />
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்<br />
பெருங்காயப் பொடி 1/2 ஸ்பூன்<br />
வறுத்து அரைத்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்<br />
கடுகு 1 ஸ்பூன்<br />
உப்பு<br />
எண்ணை<br />
செய்முறை :<br />
ஒரு வாணலி இல் 1 ஸ்பூன் எண்ணை விட்டு , பருப்புகள், மிளகாய் வற்றல் மற்றும் மிளகை வறுக்கவும்.<br />
தனியே வைக்கவும்.<br />
அதே வாணலி இல் கறிவேப்பிலையை போட்டு நன்கு வறுக்கவும்.<br />
எல்லாவற்றையும் தேங்காயுடன் தண்ணீர் விட்டு அரைக்கவும் .<br />
வாணலி இல் எண்ணை வைத்து கடுகு, மஞ்சள் பொடி தாளித்து, அரைத்தத்தை கொட்டி கிளறவும் ( வேண்டுமானால் தண்ணீர் விடவும்).<br />
வெந்தயப்பொடி, பெருங்காய பொடி போடவும்.<br />
நன்கு கொதித்ததும் இறக்கவும்.<br />
சுவையான ‘கறிவேப்பிலை குழம்பு ‘ ரெடி.<br />
<strong>குறிப்பு: தேங்காய் வேண்டாம் என்றால் விட்டு விடலாம்.<br />
வேண்டுமானால் சில பற்கள் பூண்டு அல்லது 5 -6 சின்ன வெங்காயம் தாளிக்கும் போது சேர்க்கலாம்</strong></div>senthilkumarhttp://www.blogger.com/profile/12655112694478816633noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4766659096406303772.post-69684802755307304102011-11-08T18:35:00.003-08:002011-12-14T04:00:36.938-08:00கறிவேப்பிலை குழம்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தேவையானவை :<br />
கறிவேப்பிலை உருவியது 1 கப்<br />
மிளகாய் வற்றல் 4 -6<br />
மிளகு 2 டீ ஸ்பூன்<br />
புளி பேஸ்ட் 2 ஸ்பூன்<br />
பொட்டுக்கடலை 1 ஸ்பூன்<br />
பூண்டு 5 -6<br />
தக்காளி 1<br />
சீரகம் 1/2 ஸ்பூன்<br />
உப்பு<br />
எண்ணை<br />
செய்முறை :<br />
எல்லாவற்றையும் , சீரகம் தவிர, நன்கு அரைக்கவும் .<br />
வாணலி இல் எண்ணை வைத்து சீரகம் தாளித்து, அரைத்தத்தை கொட்டி வேண்டுமானால் தண்ணீர் விடவும்.<br />
நன்கு கொதித்ததும் இறக்கவும்.<br />
சுவையான ‘கறிவேப்பிலை குழம்பு ‘ ரெடி.<br />
<strong>குறிப்பு: 1 வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம். ஜுர வாய்க்கு நல்லா இருக்கும் </strong></div>senthilkumarhttp://www.blogger.com/profile/12655112694478816633noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4766659096406303772.post-76164818299644575042011-11-08T18:35:00.001-08:002011-12-14T04:00:48.329-08:00கறிவேப்பிலை குழம்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தேவையானவை :<br />
கறிவேப்பிலை உருவியது 1 கப்<br />
மிளகாய் வற்றல் 4 -6<br />
மிளகு 2 டீ ஸ்பூன்<br />
புளி பேஸ்ட் 2 ஸ்பூன்<br />
பொட்டுக்கடலை 1 ஸ்பூன்<br />
பூண்டு 5 -6<br />
தக்காளி 1<br />
சீரகம் 1/2 ஸ்பூன்<br />
உப்பு<br />
எண்ணை<br />
செய்முறை :<br />
எல்லாவற்றையும் , சீரகம் தவிர, நன்கு அரைக்கவும் .<br />
வாணலி இல் எண்ணை வைத்து சீரகம் தாளித்து, அரைத்தத்தை கொட்டி வேண்டுமானால் தண்ணீர் விடவும்.<br />
நன்கு கொதித்ததும் இறக்கவும்.<br />
சுவையான ‘கறிவேப்பிலை குழம்பு ‘ ரெடி.<br />
<strong>குறிப்பு: 1 வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம். ஜுர வாய்க்கு நல்லா இருக்கும் </strong></div>senthilkumarhttp://www.blogger.com/profile/12655112694478816633noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4766659096406303772.post-53558671535278220362011-11-08T18:34:00.001-08:002011-12-14T04:01:03.545-08:00வத்தக்குழம்பு, சாம்பார், ரசம் செய்ய<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பருப்பு சாம்பார் செய்ய, வெந்த பருப்புடன் புளி பேஸ்ட் ஐ போட்டு கரைக்கவும் . காய்கள் தாளித்ததும், இதை கொட்டி, சாம்பார் பொடி ,வெந்தயபொடி, பெருங்காயப்பொடி என எல்லாம் போட்டு கொதித்ததும் இறக்கவும்.<br />
பருப்புசாம்பார் போலவே, ரசம் இரண்டு முதல் முன்று ஸ்பூன் புளி பேஸ்ட் ஐ உபயோகிக்கலாம்.<br />
ரசத்துக்கு தாளித்ததும் , இரண்டு தம்ப்ளர் தண்ணி விட்டு டனும்.<br />
பிறகு புளி பேஸ்ட் ஐ போட்டு கலக்கணும்.<br />
உடனேயே ரசப்பொடி , தக்காளி பருப்பு ஜலம், மஞ்சள் பொடி, பெருங்காய பொடி உப்பு எல்லாம் போட்டுடலாம்.<br />
நன்கு கொதித்து விளாவினதும் இறக்கிடலாம்.<br />
இங்கு நாம் புளி பேஸ்ட் ஐ உபயோகிப்பதால் சமயல் நேரம் குறையும். புளி யும் ‘திட்டமாக ‘ உபயோகிக்கலாம்.<br />
வத்தல் குழம்புக்கும் இதே போல் தான் <br />
புளிப்பு வேண்டுமானால் கடைசியில் கூட இன்னும் சேர்க்கலாம்.<br />
No problem ஏன்னா புளி முன்பே நல்லா கொதித்துவிட்டது.<br />
புளி பேஸ்ட் ஐ உபயோகிப்பதால் உங்கள் புளி செலவு பாதியாகிவிடும் பாருங்களேன்.</div>senthilkumarhttp://www.blogger.com/profile/12655112694478816633noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4766659096406303772.post-24995294751880849012011-11-08T18:32:00.003-08:002011-12-14T04:01:15.728-08:00Ready Made புளியோதரை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
Ready Made புளியோதரை செய்ய புளி பேஸ்ட் தவிர ஒரு பொடியும் செய்து வைத்துக்கொள்ளனும். ரொம்ப அருமையான recipe இது. எங்க வீட்டிலும் எங்க உறவினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்திலும் மிகவும் பிரபலம். <br />
முதலில் பொடி செய்யும் முறையை பார்போம். இதை நான் APP – that is ‘ALL PURPOSE POWDER’ என் அழைப்பது வழக்கம். இதை கொண்டும் பல டிஷ் கள் தயாரிக்கலாம்.<br />
தேவையானவை:<br />
500gm தனியா<br />
500gm கடலை பருப்பு<br />
250gm குண்டு மிளகாய்<br />
பெருங்காயம் – ஒரு சின்ன துண்டு<br />
கொஞ்சம் எண்ணெய் (அரை ஸ்பூன் )<br />
செய்முறை :<br />
பெருங்காயத்தை துளி எண்ணெயில் பொரிக்கவும்.<br />
தனி எ எடுத்துவைக்கவும்<br />
அதே வாணலில் மற்றவற்றை போட்டு கருகாமல் வறுக்கவும்.<br />
நன்கு ஆறினதும் மிக்சியில் போட்டு பொடிக்கவும்.<br />
உங்கள் APP தயார்.<br />
இப்ப புளியோதரை செய்யலாம்.<br />
அதற்கு ‘உதிர் உதிராய்’ வடித்த சாதம் 1 கப்<br />
APP இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்<br />
புளி பேஸ்ட் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்<br />
தாளிக்க:<br />
நல்லெண்ணெய்<br />
கடலை பருப்பு<br />
உளுத்தம் பருப்பு<br />
கடுகு<br />
மிளகாய் வட்ற்றல்<br />
கறிவேப்பிலை<br />
வேர்கடலை<br />
முந்திரி<br />
செய்முறை:<br />
ஒரு தாம்பாளம் அல்லது ஒரு பேசினில் ‘உதிர் உதிராய்’ வடித்த சாததை போடவும்.<br />
ஒரு வாணலில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்க கூறிய சாமான்களை போட்டு தாளித்து, சாதத்தின் மேல் கொட்டவும்.<br />
புளி பேஸ்ட் போடவும்<br />
APP யும் போட்டு மெல்ல கிளறவும் அல்லது குலுக்கவும்.<br />
சுவையான புளியோதரை ரெடி.<br />
<strong>குறிப்பு:APP யும், புளி பேஸ்ட் ம தயாராக இருந்தால் போரும். எப்பவேனாலும்<br />
புளியோதரை ரெடி பண்ணிடலாம்.<br />
lunchbox கு, பிக்னிக் போவதற்கு , அல்லது நாக்கு செத்து போச்சுனா உடனடியாக தயார் பண்ணலாம்</strong></div>senthilkumarhttp://www.blogger.com/profile/12655112694478816633noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4766659096406303772.post-20939243814341251982011-11-08T18:32:00.001-08:002011-12-14T04:01:30.743-08:00ரவா கிச்சடி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தேவையானவை:<br />
வறுத்த ரவை 2 கப்<br />
வெங்காயம் 2 (பொடியாய் நறுக்கவும்)<br />
தக்காளி 1 (தேவையானால் )<br />
பூண்டு 4 – 5 பற்கள்<br />
இஞ்சி 1 சின்ன துண்டு<br />
பச்சை மிளகாய் 6 -8<br />
புளி பேஸ்ட் 3 – 4 ஸ்பூன்ஸ்<br />
கேரட், உருளை, பீன்ஸ், பச்சை பட்டாணி, கத்தரி என நறுக்கிய காய்கள் மொத்தம் 1 – 1 1/2 கப்.<br />
தாளிக்க:<br />
கடுகு 1 ஸ்பூன்<br />
உளுந்து 1 ஸ்பூன்<br />
கடலை பருப்பு 1 ஸ்பூன்<br />
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்<br />
கறிவேப்பிலை 1 கைப்பிடி<br />
எண்ணை 3 – 4 ஸ்பூன்<br />
நெய் 2 -3 ஸ்பூன்<br />
செய்முறை:<br />
ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை மற்றும் நெய் விடவும்.<br />
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.<br />
பூண்டு, பச்சைமிளகாய் போடவும்.<br />
வெங்காயம் போடவும்.<br />
நன்கு வதக்கவும், இப்ப எல்லா காய்கறிகளையும் போடவும்.<br />
நன்கு கிளறவும், உப்பு போட்டு ஒரு 2 நிமிடம் மூடி வைக்கவும்.<br />
கொஞ்சம் வெந்து இருக்கும்.<br />
இப்ப புளி பேஸ்ட் போட்டு நன்கு கிளறவும்.<br />
மீண்டும் 2 நிமிடம் மூடி வைக்கவும்.<br />
திறந்து, 2 டம்பளர் தண்ணீர் விடவும், தண்ணீர் நன்கு கொதிக்கும் வரை காத்திருக்கவும்.<br />
நன்கு கொதித்ததும், அடுப்பை சின்ன தாக்கி விட்டு, ரவையை கொட்டி கிளறவும்.<br />
நன்கு வெந்ததும் இறக்கவும்.<br />
நல்ல சுவையான ‘ரவா கிச்சடி’ தயார்.<br />
தொட்டுக்கொள்ள ஒன்றுமே வேண்டாம், தயிர் போறும் </div>senthilkumarhttp://www.blogger.com/profile/12655112694478816633noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4766659096406303772.post-45518870002661217592011-11-08T18:31:00.001-08:002011-12-14T04:01:41.168-08:00அடை பிரதமன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தேவையானவை :<br />
அரிசி 1/2 டம்ளர்<br />
தேங்காய்ப்பால் 4 டம்ளர்<br />
வெல்லம் 2 டம்ளர்<br />
ஏலக்காய் 6<br />
பால் 1 டம்ளர்<br />
செய்முறை:<br />
அரிசியை ஊற வைத்து மையாக, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.<br />
அரைத்த மாவை, வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி, மெதுவாக மடித்து, நூலால் கட்டி , இட்லி தட்டில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.<br />
வெந்த பின், நன்கு ஆற விடவும்.<br />
வெந்த மாவை இலை லிருந்து உரித்து எடுத்து ,மிகவும் சிறு துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.<br />
ஒர் வாணலி இல் நெய் விட்டு முந்திரியை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.<br />
அதனுடன் அரிசி அடை துண்டுகளை பிரட்டி, பாலை சேர்க்கவும்.<br />
வெல்லத்தை பொடி செய்து போடவும்.<br />
நன்கு வெந்த தும் தேங்காய் பாலை சேர்த்து, ஏலக்காய் பொடி செய்து போட்டு இறக்கவும்.<br />
அடைபிரதமன் தயார்</div>senthilkumarhttp://www.blogger.com/profile/12655112694478816633noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4766659096406303772.post-17573445366278643292011-11-08T18:30:00.003-08:002011-12-14T04:01:51.370-08:00பால் பாயசம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தேவையானவை :<br />
அரிசி – 1 கப்<br />
பால் – 4 கப்<br />
சர்க்கரை – 2 கப்<br />
முந்திரி – 12<br />
ஏலக்காய் பொடி – 1 தேக்கரண்டி<br />
நெய் – 2 மேஜைக் கரண்டி<br />
செய்முறை:<br />
ஒரு வாணலியில் நெய் விட்டு, அதில் அரிசியைப் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.<br />
பிறகு வாணலி இல் ஒரு கப் அரிசிக்கு, ஒரு கப் பால், ஒரு கப் தண்ணீர் என்ற விகிதத்தில் சேர்த்து வேக விடவும்.<br />
பால் ,தண்ணீர் கலவையில் அரிசி நன்கு வெந்து குழைய வேண்டும்.<br />
அடிக்கடி கிளறிவிடவும்.<br />
அரிசி நன்கு வெந்ததும், மீதமிருக்கும் பாலை ஊற்றி அடிபிடிக்காமல் கிளற வேண்டும்.<br />
பால் சுண்டி வரும்போது தீயை மிதமாக வைத்துவிட்டு சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை நன்கு கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும் ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி ஆகியவற்றைப் போட்டு கிளறவும்.<br />
நன்கு கொதித்ததும் இறக்கவும்.<br />
பால் பாயசம் தயார்.</div>senthilkumarhttp://www.blogger.com/profile/12655112694478816633noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4766659096406303772.post-40462088773541696692011-11-08T18:30:00.001-08:002011-12-14T04:02:04.350-08:00அவியல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தேவையானவை:<br />
உ.கிழங்கு – 1<br />
சேனைக்கிழங்கு -1 துண்டு<br />
பூசணிக்காய் – 1 துண்டு<br />
சௌ சௌ – 1/2<br />
பீன்ஸ் – 4<br />
காரட் – 1<br />
வாழைக்காய் – 1 சிறியது<br />
தயிர் – 1/4 டம்ளர்<br />
ப.மிளகாய் – 5 -6<br />
தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்<br />
சீரகம் – 1 ஸ்பூன்<br />
உப்பு – 1 ஸ்பூன்<br />
தேங்காய் எண்ணை 1 டேபிள் ஸ்பூன்<br />
செய்முறை:<br />
எல்லாக் காய்கறிகளையும் 1 இன்ச் நீளத்திற்கு வெட்டி வைத்துக் கொள்ளவும்.<br />
சிறிது மஞ்சள் பொடி சேர்த்து காய் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேக விடவும்.<br />
பாதி வெந்தவுடன் உப்பு போட்டு கிளறி விடவும்.<br />
தண்ணீரை வடிய விடக்கூடாது.<br />
தேங்காய், பச்சை மிளகாய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும்.<br />
அரை வேக்காடாக இருக்கும் போது, தேங்காய் அரைத்த விழுதை அத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.<br />
நன்கு வெந்ததும், அதில் தயிரை ஊற்றவும். ‘திக்’கானதும், தேங்காய் எண்ணெயை விட்டு இறக்கி வைத்து வைக்கவும்.<br />
‘அவியல்’ ரெடி</div>senthilkumarhttp://www.blogger.com/profile/12655112694478816633noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4766659096406303772.post-88555022989275000532011-11-08T18:29:00.001-08:002011-12-14T04:02:15.353-08:00மிளகாய் அவியல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தேவையானவை:<br />
துவரம் பருப்பு – 1/2 கப்<br />
மிளகாய் வற்றல் – 10<br />
தக்காளி – 1 நறுக்கியது<br />
சின்ன வெங்காயம் – 10 நறுக்கியது<br />
கடுகு – 1/4 ஸ்பூன்<br />
உளுந்தம் பருப்பு – 1/4 ஸ்பூன்<br />
கறிவேப்பிலை – சிறிது<br />
எண்ணெய் – 2 ஸ்பூன்<br />
உப்பு – தேவைக்கு<br />
கொத்தமல்லி – சிறிது<br />
செய்முறை:<br />
பருப்பு, மிளகாய், தக்காளி மூன்றையும் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.<br />
பின் ஒரு வாணலி இல் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து வெந்த பருப்பை ஊற்றி உப்பு போட்டு, ஒரு கொதி விட்டு இறக்கவும்.<br />
கடைசியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்</div>senthilkumarhttp://www.blogger.com/profile/12655112694478816633noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4766659096406303772.post-18760097809539455792011-11-08T18:28:00.003-08:002011-12-14T04:02:24.390-08:00எரிசேரி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தேவையானவை:<br />
வாழை காய் 1<br />
சேனைக்கிழங்கு 1 துண்டு ( வாழை காய் இன் அளவு இருக்கணும் )<br />
அரைக்க :<br />
தேங்காய் 1 பெரிய முடி<br />
மிளகாய் வற்றல் 10<br />
மிளகு 1 டீ ஸ்பூன்<br />
சீரகம் 1 ஸ்பூன்<br />
உப்பு<br />
தாளிக்க:<br />
கடுகு 1 ஸ்பூன்<br />
உளுந்து 1 ஸ்பூன்<br />
தேங்காய் என்னை 1 டேபிள் ஸ்பூன்<br />
கறிவேப்பிலை கொஞ்சம்<br />
செய்முறை:<br />
சேனைக்கிழங்கு , வாழை காய் இரண்டையும் நறுக்கி துளி மஞ்சள் பொடி உப்பு போட்டு வேகவைக்கக்வும்.<br />
வாணலி இல் தேங்காய் எண்ணை விட்டு தாளிக்கும் பொருட்களை போட்டு தாளிக்கவும்.<br />
வெந்த காய்களை போட்டு நன்கு கிளறவும்.<br />
அறைக்க குடுத்துள்ள பொருட்களை மசிய அறைக்கவும்.<br />
வெந்த காயுடன் கோட்டவும்.<br />
வேண்டுமானால் உப்பு போடவும்.<br />
நன்கு கலந்து, மீதமுள்ள தேங்காய் எண்ணையும் விட்டு, கிளறி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.<br />
நல்ல மணமான ‘எரிசேரி’ தயார்.<br />
சாதத்தில் போட்டுக்கொண்டு சாப்பிடலாம், அப்பளாம் பொரித்தால் தொட்டுக்கொள நல்லா இருக்கும் </div>senthilkumarhttp://www.blogger.com/profile/12655112694478816633noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4766659096406303772.post-85907027592726988022011-11-08T18:28:00.001-08:002011-12-14T04:02:34.444-08:00ஓலன்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தேவையானவை:<br />
பூசணிக்காய் துண்டுகள் 2 கப் (நீள வாக்கில் நறுக்கவும் )<br />
பச்சை மிளகாய் 3<br />
தேங்காய்த் துருவல் 1 கப்<br />
கறிவேப்பிலை சிறிதளவு<br />
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி<br />
உப்பு<br />
செய்முறை:<br />
தேங்காயை தண்ணீர் விட்டு அரைத்து, பாலை பிழியவும். முதலில் பிழிந்த பால், இரண்டாவது என தனித்தனியாக பாலை வைத்துக் கொள்ளவும்.<br />
இரண்டாவது எடுத்த பாலை கொண்டு பூசணிக்காயை வேக விடவும்.<br />
வெந்ததும், கீறிய பச்சைமிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.<br />
வேண்டுமானால் சிட்டிகை மஞ்சள் பொடி போடலாம்.<br />
கடைசியில், முதலில் எடுத்த தேங்காய் பாலை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் தீயை அணைத்து விடவும். அத்தோடு கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெயைச் சேர்த்து ஆற வைக்கவும், ஓலன் தயார்</div>senthilkumarhttp://www.blogger.com/profile/12655112694478816633noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4766659096406303772.post-27299070106112588452011-11-08T18:27:00.001-08:002011-12-14T04:02:44.271-08:00பரங்கிக்காய் புளிக் குழம்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தேவையானவை :<br />
பரங்கிக்காய் – 2 பத்தை<br />
சின்ன வெங்காயம் – 10 (உரித்தது)<br />
பூண்டு – 4 பல்<br />
தக்காளி – 1<br />
புளி – எலுமிச்சையளவு அல்லது புளி பேஸ்ட் 1 டீ ஸ்பூன்<br />
உப்பு – தேவைக்கு<br />
குழம்பு மிளகாய் பொடி – 3 ஸ்பூன்<br />
வெந்தயப்பொடி 1/2 ஸ்பூன் (வறுத்து அரைத்தது )<br />
தாளிக்க:<br />
கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், பெருங்காயம், மிளகு, சீரகம், எல்லாம் 1/2 டீஸ்பூன்<br />
கறிவேப்பிலை கொஞ்சம்<br />
எண்ணை கொஞ்சம்<br />
செய்முறை:<br />
பரங்கிக்காயை துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.<br />
பூண்டைஉரித்து தட்டி வைக்கவும்.<br />
தக்காளியையும் நறுக்கிக் கொள்ளவும்.<br />
புளியை ஊற வைக்கவும்.<br />
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், மிளகு, சீரகம், பெருங்காயம் போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம், தக்காளி போட்டு 2 நிமிடம் வதக்கவும்.<br />
பிறகு பரங்கிக்காய் துண்டங்களை போட்டு வதக்கி, அதில் குழம்பு பொடி போட்டு புளிக் கரைத்ததையும் சேர்த்து உப்பு போட்டு வேக விடவும்.<br />
பரங்கிக்காய் நல்லா வெந்து பச்சை வாசனை போனவுடன், வெந்தயப்பொடி போட்டு ஒரு 2 நிமிடம் கொதிக்க விடவும்.<br />
பிறகு இறக்கவும்</div>senthilkumarhttp://www.blogger.com/profile/12655112694478816633noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4766659096406303772.post-12772746122705561812011-11-08T09:42:00.003-08:002011-12-14T04:02:56.265-08:00மோர் குழம்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தேவையானவை :<br />
‘திக்’ மோர் 2 கப் (புளிப்பில் லாதது)<br />
துவரம் பருப்பு 3 ஸ்பூன்<br />
உளுந்து 1 / 2 ஸ்பூன்<br />
கடுகு 1/2 ஸ்பூன்<br />
வெந்தியம் 1/4 ஸ்பூன்<br />
சிவப்பு மெளகாய் 4 – 5<br />
பச்சை மெளகாய் 2 – 3<br />
பெருங்காய பொடி ஒரு சிட்டிகை<br />
மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை<br />
எண்ணெய் 2 ஸ்பூன்<br />
உப்பு தேவையான அளவு<br />
துருவின தேங்காய் 2 ஸ்பூன்<br />
கறிவேப்பிலை<br />
செய்முறை:<br />
துவரம் பருப்பை ஊற வைக்கவும்.<br />
தேங்காய், கடுகு தவிர எல்லா சாமான் களையும் வறுத து, துவரம் பருப்பை சேர்த்து அரைக்கவும்.<br />
ஒரு வாணலி இல் கடுகை தாளித்து, அரைத்த விழுது, ‘திக்’ ஆனா மோர், உப்பு போட்டு கலக்கவும்.<br />
நன்கு கொதிக்கட்டும் .<br />
நடு நடு வில் கிளறவும்.<br />
கறிவேபலை போட்டு இற கவும்.<br />
மோர் குழம்பு ரெடி.<br />
சாதத்தில் போட்டு சாபிடலாம்.<br />
<strong><br />
குறிப்பு: இதில் வெண்டக்காய், முருங்க காய், பெங்களூரு கத்தரிக்காய், பூசணிக்காய், வேகவைத்து வறுத்த உருளை கிழங்கு ஆகியன ‘தான்’ ஆக போடலாம்.<br />
தொட்டுக்கொள்ள பருப்பு உசுலி நன்றாக இருக்கும்.<br />
நாள் கிழமை களில் உளுந்து வடை யை ‘தான்’ ஆக போடுவது வழக்கம்.</strong></div>senthilkumarhttp://www.blogger.com/profile/12655112694478816633noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4766659096406303772.post-15222492227726910132011-11-08T09:42:00.001-08:002011-11-08T09:42:35.410-08:00மோர் குழம்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">தேவையானவை :<br />
‘திக்’ மோர் 2 கப் (புளிப்பில் லாதது)<br />
துவரம் பருப்பு 3 ஸ்பூன்<br />
உளுந்து 1 / 2 ஸ்பூன்<br />
கடுகு 1/2 ஸ்பூன்<br />
வெந்தியம் 1/4 ஸ்பூன்<br />
சிவப்பு மெளகாய் 4 – 5<br />
பச்சை மெளகாய் 2 – 3<br />
பெருங்காய பொடி ஒரு சிட்டிகை<br />
மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை<br />
எண்ணெய் 2 ஸ்பூன்<br />
உப்பு தேவையான அளவு<br />
துருவின தேங்காய் 2 ஸ்பூன்<br />
கறிவேப்பிலை<br />
செய்முறை:<br />
துவரம் பருப்பை ஊற வைக்கவும்.<br />
தேங்காய், கடுகு தவிர எல்லா சாமான் களையும் வறுத து, துவரம் பருப்பை சேர்த்து அரைக்கவும்.<br />
ஒரு வாணலி இல் கடுகை தாளித்து, அரைத்த விழுது, ‘திக்’ ஆனா மோர், உப்பு போட்டு கலக்கவும்.<br />
நன்கு கொதிக்கட்டும் .<br />
நடு நடு வில் கிளறவும்.<br />
கறிவேபலை போட்டு இற கவும்.<br />
மோர் குழம்பு ரெடி.<br />
சாதத்தில் போட்டு சாபிடலாம்.<br />
<strong><br />
குறிப்பு: இதில் வெண்டக்காய், முருங்க காய், பெங்களூரு கத்தரிக்காய், பூசணிக்காய், வேகவைத்து வறுத்த உருளை கிழங்கு ஆகியன ‘தான்’ ஆக போடலாம்.<br />
தொட்டுக்கொள்ள பருப்பு உசுலி நன்றாக இருக்கும்.<br />
நாள் கிழமை களில் உளுந்து வடை யை ‘தான்’ ஆக போடுவது வழக்கம்.</strong></div>senthilkumarhttp://www.blogger.com/profile/12655112694478816633noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4766659096406303772.post-30373234516040971762011-11-08T09:41:00.001-08:002011-12-14T04:03:17.257-08:00நவராத்திரி சுண்டல்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
முதலில் என்ன என்ன சுண்டல் கள் செயலாம் என பார்க்கலாம்.<br />
கொத்துக்கடலை,<br />
பச்சை பயிறு,<br />
வேர்கடலை,<br />
பட்டாணி,<br />
காராமணி,<br />
மொச்சை,<br />
ராஜ்மா,<br />
கொள்ளு,<br />
பயத்தம் பருப்பு,<br />
கடலை பருப்பு<br />
என சுண்டல்கள் செயலாம்<br />
<br />
நவராத்திரி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது அழகழகான பொம்மைகளும் சுண்டலும் தான் இல்லையா? சுண்டல் கள் உடல் ஆரோகியத்துக்கு ரொம்ப நல்லது, நிறைய ‘புரோட்டீன்’ இருக்கு இதில். மேலும் ‘சரிவிகித உணவு என்று சொல்லும் அளவுக்கு, கொஞ்சம் எண்ணை, கொஞ்சம் தேங்காய், கொஞ்சம் புரோட்டீன், கொஞ்சம் கார்போ ஹைடிரெடு ‘ என்று எல்லாம் இருக்கும் இதில். சில சுண்டல் களைல் நாம் கேரட் , வெள்ளரி போன்ற சில காய் களையும் சேர்க்கலாம் . குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோரும் சாப்பிடலாம்.<br />
சுண்டல் இல் <strong>கார சுண்டல்</strong> மட்டும் அல்ல <strong>இனிப்பு சுண்டலும்</strong> இருக்கு. சிலவகை சுண்டல்களை இந்த திரி இல் பார்ப்போம். எப்போதும் போல் நீங்களும் உங்கள் குறிப்புகளையும் இங்கு பகிரலாம் உங்கள் பின்னூட்டங்களும் சந்தேகங்களும் வறவேர்க்கப் படுகின்றன </div>senthilkumarhttp://www.blogger.com/profile/12655112694478816633noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4766659096406303772.post-91598809526879515272011-11-08T09:40:00.001-08:002011-12-14T04:03:31.892-08:00நவராத்திரி சுண்டல்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
முதலில் என்ன என்ன சுண்டல் கள் செயலாம் என பார்க்கலாம்.<br />
கொத்துக்கடலை,<br />
பச்சை பயிறு,<br />
வேர்கடலை,<br />
பட்டாணி,<br />
காராமணி,<br />
மொச்சை,<br />
ராஜ்மா,<br />
கொள்ளு,<br />
பயத்தம் பருப்பு,<br />
கடலை பருப்பு<br />
என சுண்டல்கள் செயலாம்<br />
நவராத்திரி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது அழகழகான பொம்மைகளும் சுண்டலும் தான் <img alt="புன்னகை" longdesc="4" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" title="புன்னகை" /> இல்லையா? சுண்டல் கள் உடல் ஆரோகியத்துக்கு ரொம்ப நல்லது, நிறைய ‘புரோட்டீன்’ இருக்கு இதில். மேலும் ‘சரிவிகித உணவு என்று சொல்லும் அளவுக்கு, கொஞ்சம் எண்ணை, கொஞ்சம் தேங்காய், கொஞ்சம் புரோட்டீன், கொஞ்சம் கார்போ ஹைடிரெடு ‘ என்று எல்லாம் இருக்கும் இதில். சில சுண்டல் களைல் நாம் கேரட் , வெள்ளரி போன்ற சில காய் களையும் சேர்க்கலாம் . குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோரும் சாப்பிடலாம்.<br />
சுண்டல் இல் <strong>கார சுண்டல்</strong> மட்டும் அல்ல <strong>இனிப்பு சுண்டலும்</strong> இருக்கு. சிலவகை சுண்டல்களை இந்த திரி இல் பார்ப்போம். எப்போதும் போல் நீங்களும் உங்கள் குறிப்புகளையும் இங்கு பகிரலாம் <img alt="புன்னகை" longdesc="4" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" title="புன்னகை" /> உங்கள் பின்னூட்டங்களும் சந்தேகங்களும் வறவேர்க்கப் படுகின்றன <br />
<br /></div>senthilkumarhttp://www.blogger.com/profile/12655112694478816633noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4766659096406303772.post-1453712899109884232011-11-08T09:39:00.001-08:002011-11-08T09:39:19.428-08:00தேங்காய் பருப்பு போட்டு சுண்டல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">இந்த வகை யான சுண்டல் செய்வதற்க்கு பட்டாணி, கடலை பருப்பு, வேர்கடலை, ராஜ்மா , கொத்து கடலை போன்றவை ஏற்றவை.<br />
தேவையானவை:<br />
மேலே சொன்ன பட்டாணி, வேர்கடலை, ராஜ்மா, கொத்துக்கடலை ஏதாவது ஒன்று 1 கப்<br />
மிளகாய் வற்றல் 4 -5<br />
பெருங்காயப் பொடி 1/2 ஸ்பூன்<br />
தேங்காய் துருவல் 1/2 கப்<br />
கறிவேப்பிலை கொஞ்சம்<br />
கடுகு 1 ஸ்பூன்<br />
உளுந்து 1 ஸ்பூன்<br />
தாளிக்க எண்ணை<br />
உப்பு<br />
செய்முறை:<br />
மேலே சொன்ன தனியங்களில், வேர்கடலை என்றால் 2 மணி நேரம் ஊரினால் போறும்.<br />
மற்ற தானியங்கள் என்றால் முதல் நாள் இரவே நன்கு களைந்து, தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.<br />
குறைந்த பக்ஷம் 12 மணி நேரமாவது ஊறவேண்டும்.<br />
மறுநாள், தண்ணீரை வடித்துவிட்டு, கொஞ்சமாக பருப்புகள் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு , உப்பு போட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விடவும்.<br />
<span style="color: #cc0000;">சிலர் ஒரு சிட்டிகை சோடா உப்பு போடுவா அது அவ்வளவு நல்லது அல்ல.</span><br />
ஒரு வாணலி இல் எண்ணைவிட்டு, கடுகு, உளுந்து , மிளகாய் வற்றல் தாளிக்கவும்.<br />
கறிவேப்பிலை பெருங்காயப்பொடி போடவும்.<br />
வெந்த பட்டாணி, போடவும்.<br />
நன்கு கிளறவும்.<br />
உப்பு முதலி லேயே போட்டதால் இப்ப போட வேண்டாம்.<br />
தேங்காய் துருவல் தூவி கிளறி இறக்கணும் .<br />
அவ்வளவுதான், சுண்டல் நைவேத்யத்துக்கு ரெடி </div>senthilkumarhttp://www.blogger.com/profile/12655112694478816633noreply@blogger.com0