Showing posts with label சாம்பாரில் போடும் வெங்காய வடாம். Show all posts
Showing posts with label சாம்பாரில் போடும் வெங்காய வடாம். Show all posts

Tuesday, November 8, 2011

சாம்பாரில் போடும் வெங்காய வடாம்

செட்டி நாட்டு வெங்காய வடகம்
தேவையான வை :
சின்ன வெஙகாயம் – 1/2 கிலோ,
பூண்டு – 50 கிராம்
உளுத்தம் பருப்பு – 100 கிராம்
சிகப்பு மிளகாய் – 15 -20
சீரகம் – 1 டீ ஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1/2 ஸ்பூன்
கடுகு – 2 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு,
கறிவேப்பிலை – கொஞ்சம்
மஞ்சள் தூள் – கொஞ்சம்
செய்முறை :
வெங்காயத்தையும், பூண்டையும் உரித்து மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெள்ளை உளுத்தம் பருப்பை ஊறவைத்து களைந்து கல் நீக்கி மிளகாயுடன் உப்பும் சேர்த்து கெட்டியாக நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
மாவுடன் சீரகம், பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், கடுகு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
வெயிலில் பிளாஸ்டிக் ஷீட்டைப் போட்டு மாவைச் சிறிது சிறிதாகக் கிள்ளி காயவைக்கவும்.
மறுநாள், வத்தலை திருப்பி போட்டு காய வைக்கவும்.
2 நாள் காயவேண்டும்.
காய்ந்ததும் ‘சல சல வென சத்தம் வரணும்.
பிறகு டப்பாவில் போட்டு வைக்கலாம்.
தேவையான போது வறுத்து குழம்பில் போடலாம்.